Thursday, June 30, 2011

பொழில்


'ஐ குதிர'
'அதோ பாம்பு'
'ஹேய் இங்க பாரு
தேறு'
'அதோ முதலை!!!
சற்றே வியந்துதான் போனேன்
தெருவில் பொம்மை திருவிழாவோ என்று?
திருவிழாதான் என் மனதுக்குள்
வாசலில் நின்றபடி
வானத்தை பார்த்தபடி கை கொட்டி
சிரித்த என் பொழிலை பார்த்த போது!!!!




நிலவன்


நிலவிற்கு  தாலாட்டும் பாடுகின்றேன் 
தமிழும் கற்பிக்கின்றேன்!!
நிலவு சிரித்து முதன் முதலில் பார்க்கிறேன் 
அதனால் நானும் சிலிர்க்கிறேன்!!
நிலா பூமியை மட்டும் தானே சுற்றும்
நீ என்னையே சுற்றி விளையாடுகிறாய்!!
நில-உலகில் நிலவு!!
அதிசயம்தானே!
எங்கும் சிரிபொலி ஒலித்திட
விளையாடுகிறது என் நிலவு
என் பொழில் நிலவன்!!!














Thursday, June 23, 2011

நெற்றி பொட்டு


மேகத்தில் மிதந்து
   வெண்ணிலவில் உறங்கி...
விண் மீன்களில் தாவி
   கனவுகளில் வாழ்ந்து...
உன் நெற்றி பொட்டில் 
  உயிர் இழக்கிறேன் ....
உன்னை காணும் போதெல்லாம்..
      நான்!!! 

மழை காதல்-2

மழையில் நனைந்து சிலிர்க்கிறாய் 
மீண்டும் நனைய தோன்றுகிறது 
எனக்கு!
உன்னை நனைத்த மழை துளிகளில்!!!

Tuesday, June 21, 2011

மரணம்


உலகத்தில் விழுந்துவிட்டேன் ...
எமனே!!உன் பாசக் கயிற்றை  கொண்டு 
காப்பாற்றுவாயா?

மழை காதல்

நள்ளிரவில்  எழுந்து
சாளரத்தை திறந்து
மழையால் சில்லிட்ட
கம்பிகளில் உணர்ந்தேன்
உன் காதலை 




Monday, June 20, 2011

சின்ன சின்ன ஆசைகள்...

சின்ன சின்ன ஆசைகள்...

பிறந்த நாள் வாழ்த்து பாடிட
இன்று மலர்ந்த மலர்...
கண்ணில் சேமித்திட ஆசை
முதல் மழை துளி...
தொட்டு விளையாட ஆசை
வானில் நிறைந்த பௌர்ணமி..
தோளில் தங்கிட ஆசை
சோர்ந்து விழும் நண்பன்...
பார்த்துக்கொண்டிருக்க  ஆசை
மழலை உதிர்த்த புன்னகை
கேட்டுக்கொண்டிருக்க ஆசை
தோழியின் செல்ல அதட்டள்...

மடியில் மரன்னீததிட ஆசை..
தலை கொதும் அன்னை....