விண்ணில் மிதந்து
வானில் பறந்து
சற்றே மூச்சடைத்துதான்
போனேன்...
நீ என்னை பெண் பார்த்து சென்ற நாளில்!!!
பாதாம், முந்திரி, திராட்சை
உடம்பிற்கு நல்லதாம்
அம்மா கூறிவிட்டு சாப்பிட சொன்னாள்
உன் நினைவுகளே என் உணவு என்றான பின்
எதற்கு இதெல்லாம் ...
இன்னும் வானில் இருந்து இறங்கவில்லை
கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும்!!
ஆம் என் நிச்சயமே சொர்கத்தில்தான் நடைபெற்றது
உன்னுடன் நான்!!
எப்பொழுதும் அம்மா அப்பா என்று
எண்ணிக்கொண்டிருந்தவளை
இப்படி மாற்றி விட்டாயடா!!
உன் இரு விழி பார்வைகளில்!!
இப்பொழுதுதான் முதன் முதலில்
கோவம் வருகிறது தமிழர் பண்பாட்டை நினைத்து
உன்னை சேர்வதற்கு இவ்வளவு சடங்குகளா??
எப்போழுதோ என்னை கொண்டுசென்று விட்டாய்
இதற்கு பிறகும்
சம்ப்ரதாயங்கள் அவசியமோ??
மீண்டும் ஒரு குடும்பம்
மீண்டும் நானே குழந்தை
தாய் தந்தையாக நீ!!
அந்த விடியல் என்வாழ்வே வசந்தமாகிய நொடிகள்!!
உன்னருகில் அமர்ந்திருந்து என்னை மறந்த பொழுது!!!
இரண்டாம் முறையாக பிறந்தேன்
உன் மனைவியாய்!!!
நீ தெய்வ மாங்கல்யத்தை சூடியபோது!!
கல்யாணமும் முடிந்தாகி விட்டது!!
குழந்தையும் பிறந்தாகி விட்டது..
இன்னும் உன் முதல் குழந்தையாய் நான்!!!
என் இரண்டாம் தாயாய் நீ
